search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை ரெயில் நிலையம்"

    • பாலக்காடு-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை வரை இயக்கப்பட்டது.
    • 16 முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தூத்துக்குடி, திருநெல்வேலியில் பெய்த பேய் மழையால் வெள்ளம் கரை புரண்டு ஓடியதில் தண்டவாளங்கள் சேதம் அடைந்தன. ரெயில் பாதை அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் தண்டவாளங்கள் தொங்கி கொண்டு இருக்கின்றன.

    இதனால் தென் மாவட்டங்களுக்கு ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி, நெல்லை, ரெயில் நிலையங்களை மையமாக கொண்டு இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை நின்றதால் வெள்ள நீர் வடிந்து வருகிறது.

    ரெயில் பாதையில் தேங்கிய வெள்ளம் வடிந்து வருவதால் தண்டவாளங்கள் மற்றும் பாதையை சீரமைத்து ரெயில்களை இயக்க போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் ரெயில் சேவை இன்றும் அந்த மார்க்கத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. 21 ரெயில்களை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

    திருச்செந்தூர்-திருநெல்வேலி முன்பதிவில்லாத பயணிகள் சேவை இருமார்க்கமும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மணியாட்சி-திருச்செந்தூர், திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி-நாகர்கோவில், திருநெல்வேலி-தூத்துக்குடி, செங்கோட்டை-திருநெல்வேலி.

    தூத்துக்குடி-திருநெல்வேலி உள்ளிட்ட 16 முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எழும்பூரில் இருந்து நேற்று திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் இன்று வழக்கம் போல நெல்லை ஜங்ஷன் வரை இயக்கப்பட்டது.

    நாகர்கோவில்-கன்னியாகுமரி குமரி எக்ஸ்பிரஸ் (06643), நாகர்கோவில்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, புனலூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பாலக்காடு-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை வரை இயக்கப்பட்டது. திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்பட்டது.

    இதேபோல திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் -திருநெல்வேலி இடையே மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.
    • பாதுகாப்பு கருதி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

    தேவைக்கேற்ப அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பாதுகாப்பு கருதி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.

    மழை ஓய்ந்த பிறகு மீட்பு பணிகளும், நிவாரண உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், நெல்லை ரெயில் நிலையத்தில் சூழ்ந்து இருந்த வெள்ள நீர் வடிந்த நிலையில் ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

    நெல்லை - செங்கோட்டை இடையே பயணிகள் ரெயில் சேவை, செங்கோட்டை - தாம்பரம் இடையே இயங்கும் பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில் சேவைகள் வழக்கம் போல செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ×